மக்களின் நடத்தை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிருப்தி
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நாளை கூடவுள்ள கோவிட் பணிக்குழு கூட்டத்தில் மேல் பரிசீலனை செய்யப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போதுள்ள விதிமுறைகளை கடுமையாக்க அல்லது தளர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை,கடந்த இரண்டு நாட்களில் மக்களின் நடத்தை திருப்திகரமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்றுநோயை சமாளிக்க, சுகாதார துறைக்கு மக்களின் ஆதரவு தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 50%குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.