ஜனாதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு! நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மனு நேற்று(28.08.2024) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொய்யான தகவல்கள்
குறித்த மனு பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு பொய்யாக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த மனு அரசியலமைப்பின் 92 வது சரத்தை மீறுவதாகவும் இருப்பதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற கட்டணமாக 50,000 ரூபாய் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவிடப்டப்டுள்ளது.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam