வடக்கு - கிழக்கை உள்ளடக்கி முக்கிய கலந்துரையாடல்! விரைவில் இறுதி முடிவு (VIDEO)
சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இக்கலந்துரையாடல்களில், வடக்கு மாகாண கலந்துரையாடல் நேற்றைய தினம்(09.07.2023) கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள எ.ஆர்.ஆர். வணிக வளாகத்தில் நடைபெற்றது.
மேலும், கிழக்கு மாகாண கலந்துரையாடல் நேற்றைய தினம் (09.07.2023) காலை 11.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மட்டக்களப்பில் உள்ள east lagoon விடுதியில் நடைபெற்றது.
கலந்துரையாடல்
மக்கள் சிந்தனை மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், தவத்திரு. அகத்தியர் அடிகளார் (தென்கயிலை ஆதினம்) தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் - p2p மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்) பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் (யாழ் பல்கலைக்கழக அரசியல் துறை தலைவர்)திருமதி.புளோரிடா சிமியோன் (அரசியல் துறை விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
