வாக்குசீட்டுக்களை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குசீட்டுக்களை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான .அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம்(23) காலை 9.30 மணிக்கு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தல்
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர்.ஜெ.ஜெனிற்றனால் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள்,பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.