வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொது மக்களின் பயிர் செய்கை காணிகளை விடுவிப்பது தொடர்பிலும், அதன் முன்னேற்றங்கள் தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளன.
அதாவது வனவளத் திணைக்களத்தின் ஆலோசகர் உள்ளடங்கிய உயர் அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஆனைவிழுந்தான் பகுதியில் வனவள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 600 ஏக்கர் வரையான நிலப்பரப்பு மற்றும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி பிரதேசங்களில் வன வளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில் கரைச்சி பிரதேச செயலாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், பூநகரி பிரதேச செயலாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri