கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை, கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவசியமான திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த விசேட கலந்துரையாடல் திருவண்ணாமலை ஆளுநர் அலுவலகத்தில், நேற்று(01) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
விசேட கலந்துரையாடல்
இதில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலங்கம உட்பட, கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண துறைசார்ந்த அரச திணைக்களத் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள், மாகாண சபையால் செயல்படுத்தப்படும் போது ஏற்படுகின்ற இடையூறுகள், பிரச்சினைகள் என்பன இனங்காணப்பட்டு, அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமாவது குறித்தும், அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.





253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam
