திருகோணமலையில் காணி உரிமை தொடர்பான கலந்துரையாடல்
தனியார் நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் இன்று (23.10.2024) திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள திரியாய் மற்றும் புல்மோட்டை ஆகிய கிராம மக்களுக்கான காணி உரிமை தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.
குச்சவெளி பிரதேசத்தில் திரியாய் மற்றும் புல்மோட்டை ஆகிய கிராம மக்கள், காணி பிணக்குகளால் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இச்சவால்களுக்கு முகம்கொடுக்கும் மக்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் வகையில் இக்கலந்துரையாடல் ஒழுங்குசெய்யப்பட்டது.
நிறுவன உத்தியோகத்தர்கள்
இக்கலந்துரையாடலில் திரியாய் மற்றும் புல்மோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த 42 மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் திரியாய் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலந்துகொண்டிருந்தார்.
மேலும், தனியார் நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடல் திரியாய் மக்களுடன் திரியாய் விவசாய சம்மேளணக்கட்டிடத்திலும் புல்மோட்டை மக்களுடன் புல்மோட்டை சலாமியா வித்தியாலயத்திலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |