காணாமல் போனோர் அலுவலகத்தினால் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நேற்று(29.10.2024) காலை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களான தியாகராஜா யோகராஜா, அர்பா தாசிம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஆக்கப்பட்டோரின் உறவுகள்
இந்நிலையில், ஏனைய மாவட்டங்களிலும் இது போன்ற கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எந்த நேரமும் தங்களின் முறைப்பாடுகளை எமது ஐந்து பிராந்திய நிலையங்கள் ஊடாக முன்வைக்க முடியும் என தியாகராஜா யோகராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை 21000விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 15000வரையான விண்ணப்பங்களுக்கு பூர்வாங்க விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், 6500முறைப்பாடுகளுக்கு பூர்வாங்க விசாரணை நடைபெற்று அதற்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தியாகராஜா யோகராஜா விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 13 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
