‘நீதிக்கான அணுகல்’ செயற்றிட்டத்தின் கீழ் யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் (Photos)
நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ‘நீதிக்கான அணுகல்’ செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், பிரதமரின் இணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் நீதி அமைச்சின் செயலாளர் பி.கே.மாயாதுன்ன,
நீதி அமைச்சின் மேலதிக செயலாளர், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான
அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பல்கலைக்கழகத்
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பல்கலைக்கழகப் பேரவையின்
உறுப்பினர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும்
மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.


நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam