வெளிநாடு ஒன்றில் சிக்கி தவிக்கும் 300 இலங்கை பெண்கள்
மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது.
குவைத்தில் பல்வேறு காரணங்களுக்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் தனியார் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை உடனடியாக விடுவித்து இலங்கைக்கு அழைத்துச் செல்லுமாறு வெளியிட்டுள்ள காணொளி சமூக ஊடகங்களில் கவனத்திற்குள்ளாகியுள்ளதாக பணியகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவல நிலை
தமது அவல நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத் கவனம் செலுத்த வேண்டும் என காணொளி வாயிலாக குறித்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், இலங்கை வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.



