குருநாகல் கேபிள் கார் விபத்து : சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் மரணம்
குருநாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அதற்மைய இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் சிகிச்சை
நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 7 பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டுப் பிக்குகளும் அடங்குவர். உயிரிழந்த உள்நாட்டுப் பிக்குகளின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதேவேளை, இந்த விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 5 பிக்குகள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam