கடற்றொழில் அமைச்சர் - செல்வம் எம்.பி இடையே விசேட கலந்துரையாடல்
வடக்கில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேற்று(03.04.2025) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடற்றொழிலாளர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலையை கொண்டுள்ள இடப்பிரச்சினை தொடர்பில் கலந்தரையாடப்பட்டதாக செல்வம் அடைக்களநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அத்தோடு, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,