வன்னித் தேர்தல் தொகுதியில் ரணிலின் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்
ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (06.09.2024) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நடவடிக்கைகள்
ஜனாதிபதி தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைக்க வன்னித் தேர்தல் தொகுதியில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதில் ஆராயப்பட்டதுடன், பொறுப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுடன் இராஜாங்க அமைச்சர்களான கே.கே.மஸ்தான், சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினரான கு. திலீபன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

Mahanadhi: பசுபதியின் முகத்திரையை கிழிக்க போராடிய வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. இனி நடக்கப்போவது என்ன? Manithan
