இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடியுள்ள தினேஷ் குணவர்தன
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லி, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பரந்த அளவில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இலங்கை வழங்குவது உள்ளிட்ட நீண்ட கால திட்டங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு கொள்கலன் முனையம் குறித்த இலங்கையின் முடிவு மற்றும் இலங்கையில் சில புதிய திட்டங்களில் சீனாவின் ஈடுபாடு குறித்து இந்தியா அண்மையில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
அத்துடன் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நிர்வாகத்தை இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்த பின்னர் மேற்கு முனையச் சலுகையை இந்தியா இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த நிலையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்துள்ளார்.