ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லை! விவாதிப்பதற்காக கூடும் சஜித் தரப்பினர்!
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்க. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி கூடுகிறது.
இந்த தகவலை கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பெயரை கட்சி முன்மொழியவுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமது கட்சி எந்த ஆதரவையும் வழங்காது எனவும் அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கட்சியில் இருந்து சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையப்போவதாக வெளியான தகவலின் மத்தியிலேயே இந்த கருத்து வெளியாகியுள்ளது.