களனிவெளி பாதையில் தொடருந்து சேவைகள் துண்டிப்பு
கொழும்பிலிருந்து அவிசாவளை வரை செல்லும் களனிவெளி தொடருந்து பாதையில், தொடருந்து ஒன்று தடம்புரண்டதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளையில் இருந்து கொழும்பு வரை பயணித்த தொடருந்து ஒன்று மஹரகமை பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது. அதன் காரணமாக களனிவௌி பாதையில் தொடருந்துகள் மறு அறிவித்தல் வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளன.
தொடருந்து சேவைகள் துண்டிப்பு
இதற்கிடையே தொடருந்து திணைக்கள ஊழியர்கள் தடம்புரண்ட தொடருந்தை மீண்டும் தண்டவாளத்துக்கு ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தொடருந்து மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டதும் களனிவௌி தொடருந்து பாதையின் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.