போதைப்பொருள் காணாமல் போன சம்பவம்: நீதிமன்ற அலுவலரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி
பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் சாட்சிய அறைக்கு பொறுப்பான பாதுகாவலரை, விசாரணைக்காக தொடர்ந்தும் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் இன்று(30) அனுமதி வழங்கியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
முன்னதாக, 240 மில்லியன் ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பிரதம நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan