போதைப்பொருள் காணாமல் போன சம்பவம்: நீதிமன்ற அலுவலரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி
பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் சாட்சிய அறைக்கு பொறுப்பான பாதுகாவலரை, விசாரணைக்காக தொடர்ந்தும் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் இன்று(30) அனுமதி வழங்கியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
முன்னதாக, 240 மில்லியன் ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பிரதம நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
