போதைப்பொருள் காணாமல் போன சம்பவம்: நீதிமன்ற அலுவலரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி
பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் சாட்சிய அறைக்கு பொறுப்பான பாதுகாவலரை, விசாரணைக்காக தொடர்ந்தும் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் இன்று(30) அனுமதி வழங்கியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
முன்னதாக, 240 மில்லியன் ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயின் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பிரதம நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
