சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO)

Sri Lanka Batticaloa Disabled People International Day Disabilities
By Independent Writer Dec 04, 2021 06:35 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு கௌரவிப்பு நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. 

 முல்லைத்தீவு மாவட்டம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக மாற்றுத்திறனாளிகளின் 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் நேற்று(03) காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது.

புதிய வாழ்வு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பிலும் முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மாதர் அமைப்பின் ( WOWD) ஒழுங்குபடுத்தலிலும் இந் நிகழ்வு இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ளது.

கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகள் 60 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகள் 40 பேருமாக மொத்தம் 100 பேருக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அத்துடன், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள் மூன்று பேருக்கும் 10000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எழுகை மாற்றுத் திறனாளிகளின் நிலையத்தில் மதியம் 2.00 மணிக்கு மாற்று திறனாளிகளுக்கான மற்றுமொரு நிகழ்வும் இடம்பெற்றது.  

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

மன்னார்

சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ”மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்” என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய இந் நூல் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

மாந்தை மேற்கு வீகான் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் வெற்றிச் செல்வி சந்திரகலாவின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானு கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, நூலாசியரும், ஊடகவியலாளருமான பி.மாணிக்கவாசகத்தின் சேவையினை பாராட்டி மாந்தை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு 'காலத்தின் குரல்' என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளனர்.

இந் நிகழ்வில் இயலாமையுடைய மக்களுக்கான தேசிய சபை அங்கத்தவர் வெ.சுப்பிரமணியம், மன்னார் எச்.என்.பி.வங்கி முகாமையாளர் வடிவழகன், தமிழ்மணி கலாபூசணம் மேழிக்குமரன், உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி ஓய்வுநிலை உப பீடாதிபதி ந.பார்த்தீபன் இவர்களுடன் தேசிகன் மற்றும் உயிரிழை அமைப்பின் அங்கத்தவர்கள் பொதுமக்கள் என என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

செய்திகள் :  தீசன் 

மட்டக்களப்பு

மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளதாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தானா முனை மியானி மண்டபத்தில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


"ஊனமுற்ற நபர்களின் தலைமைத்துவம் மற்றும் பங்கேற்பு உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலையான கோவிட் - 19 இற்குப் பிந்தைய உலகம்" எனும் தொனிப்பொருளிற்கு அமைய இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

இதன்போது மேலும் தெரிவிக்கையில், 

மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள மாவட்டமாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான சேவையினை வழங்கும் மாவட்டமாகவும் இந்த மாவட்டம் காணப்படுகின்றது.

கடந்த காலத்தில் தொழில் தகைமைகளை பெற்றுக்கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்று ஒழுங்குகளையும் பரீட்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நாட்டுக்கு பாரமானவர்களாக பார்க்கப்பட்டார்கள். இன்று அவர்களை நாங்கள் மற்றவர்களுடன் ஒன்றிணைத்திருக்கின்றோம்.

எதிர்காலத்தில் நாட்டுக்கு முன்னுதாரணமாகவும் பொருளாதார ரீதியில் பங்களிப்பு செய்ய வேண்டிய தேவையும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கின்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரித்திருந்தாலும் அடுத்த வருடத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவுக்காக கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் 12கோடி ரூபா மேலதிகமாக திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ளது.

நோய் தொடர்பானவர்களை பொறுத்தவரையில் 500 ரூபாவாக வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவுகள் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் காசநோய், கிட்டினி, புற்றுநோய் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட 500 ரூபாய் கொடுப்பனவுகளும் 5000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொள்வதற்கும் தலைமைத்துவங்களை பெற்றுக்கொள்வதற்குமாக தயார்படுத்தல்களை மாற்றுத்திறனாளிகள் முன்கொண்டு செல்ல வேண்டும்.

அதற்காக மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசார்பற்ற நிறுவனங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் எனவும் இதன் போது தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன் , ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.மேனகா உள்ளிட்ட திணைக்களம் சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு (VIDEO) | Disabled Batticaloa

செய்திகள் : குமார்

மாந்தை கிழக்கு

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் நேற்று மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

பாலிநகர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் தம்பிமுத்து சிவனடியான் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

மாந்தை கிழக்கு உதவி பிரதேச செயலாளர், மல்லாவி பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர், மதகுருமார், CPR திட்ட முகாமையாளர்கள், மற்றும் மாற்று வலுவுள்ள உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   

GalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி

பூநகரி, யாழ்ப்பாணம்

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

22 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US