ஆக்கிரமிப்பு நிறுத்தப்படாவிட்டால் இராஜதந்திர நகர்வு கேள்விக்குறியே! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு, குற்றங்களுக்கு ஆக்கிரமிப்பாளர் பொறுப்பேற்க வைக்கப்பட்டால் மாத்திரமே, ஈரான் மீண்டும் இராஜதந்திர உரையாடல்களை பரிசீலிக்கத் தயாராக உள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஈரானின் அணுசக்தி திட்டம்
ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காக உள்ளது. மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் செயல்படுகிறது.
எனினும், அணு ஆயுத ஒப்பந்தங்களில் பங்கேற்காத ஒரு ஆட்சியால் பாதுகாக்கப்பட்ட அணு நிலையங்கள் மீது ஆயுதமேந்திய தாக்குதல்கள் நடத்தப்படுவது கடுமையான குற்றமாகும் .
இது தொடர்பில் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் (E3) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியது குறித்து ஈரான் கவலையை வெளிப்படுத்துகிறது.
மேலும், ஈரானின் பாதுகாப்புத் திறன்கள் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் உட்பட்டவை அல்ல என்பதை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 26 நிமிடங்கள் முன்

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
