மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தொடர்பில் வெளியான தகவல்

Batticaloa
By Benat Apr 26, 2024 10:30 AM GMT
Report

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தை பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Brian Udaigwe ஊடாக பாப்பரசருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மின்னஞ்சல் மூலமாக இந்த பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பதவி விலகல்

ஆயரின் பதவி விலகல் கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  

எனினும், இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜீவராஜ் தொடர்புகொள்ள முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தொடர்பில் வெளியான தகவல் | Diocesan Bishop Of Batticaloa 

தொடர்ச்சியாக உடல் நிலை பாதிப்புக்குள்ளான ஆயர் அவர்கள் இதன் காரணமாக பதவி விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தே முதன் முறையாக தெரிவு செய்யப்பட்ட ஆயராக இவர் திகழ்கின்றார்.

எனினும், அடுத்து வரப் போகும் ஆயர் எங்கிருந்து தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

மறைமாவட்டம் தொடர்பான சர்ச்சைகள்

எவ்வாறாயினும், ஆயரின் கோரிக்கை தாமதமின்றி ஏற்று கொள்ளப்பட்டு விரைவில் புதிய ஆயர் ஒருவர் நியமிக்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுவரையான காலப்பகுதியில், அருகில் உள்ள ஆயர் ஒருவரின் கீழ் பெறுப்புக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதேவேளை, மட்டக்களப்பு மறை மாவட்டம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுக்களும் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக அண்மையக் காலத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.  ஆயர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை, அருட்தந்தையர்களும் சுமத்தியிருக்கின்றனர். 

இந்தநிலையிலேயே, ஆயரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நான் விரைவில் கொலைசெய்யப்படலாம்! மட்டக்களப்பில் உள்ள அருட்தந்தை பரபரப்பு வாக்குமூலம்

நான் விரைவில் கொலைசெய்யப்படலாம்! மட்டக்களப்பில் உள்ள அருட்தந்தை பரபரப்பு வாக்குமூலம்

யோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் 1952 அக்டோபர் 12 ஆம் திகதி பிறந்தார்.

புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தொடர்பில் வெளியான தகவல் | Diocesan Bishop Of Batticaloa  

யோசப் பொன்னையாவின் சேவைகள்

யோசப் பொன்னையா 1980 ஏப்ரலில் கத்தோலிக்க அருட்தந்தையாக பணியிலமர்த்தப்பட்டார். இவர் பங்கு தந்தையாக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.

மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராகப் (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்கு தந்தையாக பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

2008 பெப்ரவரியில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை-ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.

2012 சூலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தொடர்பில் வெளியான தகவல் | Diocesan Bishop Of Batticaloa

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US