இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்
டில்ஷான் மதுஷங்க காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றையதினம் (20.03.2024) டில்ஷான் மதுஷங்கவிற்கு மாற்று வீரராக தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குவெனா மபாகாவை அறிவித்ததையடுத்தே குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.
ரசிகர்கள் கவலை
கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.6 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

இந்நிலையில், உபாதை காரணமாக அவர் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 24ஆம் திகதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri