நிசங்க சேனாதிபதியிடம் 2 பில்லியன் கோரும் தில்ருக்ஷி விக்ரமசிங்க
இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதிப் சொலிசிட்டர் ஜெனரலுமான தில்ருக்ஷி விக்ரமசிங்க மற்றும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆகியோருக்கு இடையில் நடந்த தொலைபேசி உரையாடல் தொகுக்கப்பட்டது என்பதை நிர்வாக மேன்முறையீட்டு நீதிச் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் காரணமாக தில்ருக்ஷி பணி இடைநீக்கப்பட்டதுடன் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பணி இடைநீக்கப்பட்டதை இரத்துச் செய்யுமாறு நீதிச் சபை உத்தரவிட்டுள்ளதுடன் மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.
இதனிடையே குரல் பதிவு சம்பவம் காரணமாக தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உடனடியாக 2 பில்லியன் ரூபாயை இழப்பீடாக செலுத்துமாறு கோரி தில்ருக்ஷி விக்ரமசிங்க, நிசங்க சேனாதிபதிக்கு சட்டத்தரணி ஊடாக அறிவிப்பணை அனுப்பியுள்ளார்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam