சொந்த மக்களிடமிருந்து சவாலை எதிர்கொள்ளும் ஜே.வி.பி
ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணி, தற்போது மிகக் குறுகிய காலத்திற்குள் அதன் சொந்த மக்களிடமிருந்து ஒரு சவாலை எதிர்கொள்கிறது என்று, சர்வஜன பலய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஆளும் கட்சி இப்போது எல்லாவற்றையும் கட்டுக்கதைகளால் மூடி மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வஜன பலய கூட்டணியின் தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உணவுகளின் விலை
நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரின் உரையைக் குறிப்பிட்டு காட்டிய அவர் ஒருவருக்கு மட்டுமே அரச வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

ஆனால் அனைத்து வாகனங்களும் மாதிவெலவில் (நாடாளுமன்ற வீட்டு வளாகம்) இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமரா கூறுகிறார். அதேநேரம் அவர்கள் வாகனங்களில் நாடாளுமன்றத்திற்கு வருவதை தாமும் பார்த்திருப்பதாக திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலையை உயர்த்தும் முடிவு குறித்து கருத்துரைத்த அவர், ஒரு சிறிய சாலையோரக் கடையில் இருந்து மதிய உணவு பொதிகளை வாங்கினாலும், ஒரு நாளைக்கு 2,000 ரூபாய்க்கு மூன்று வேளை சாப்பிட முடியாது என்று கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri