காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளருக்கு தொடர் விளக்கமறியல்
காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான சேனாதி குருகே எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 2 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
இராணுவத்தினர் மீதான தாக்குதல்
காலிமுகத்திடல் பேராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளரும் போராட்டத்தின் தேசிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளருமான சேனாதி குருகே, மத்திய குற்றவியல் விசாரணை அலுவலகத்தினரால் நேற்று(24) கைது செய்யப்பட்டதுடன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர் மீது, போராட்டக்களத்தில் இரண்டு இராணுவத்தினரைக் கடத்திச் சென்று தாக்குல் மேற்கொண்டதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
