சத்திர சிகிச்சைக்காக வீட்டை விற்பனை செய்த டிலான் பெரேரா
சத்திர சிகிச்சைக்காக பதுளையில் தான் 63 வருடங்களாக வாழ்ந்த வீட்டை விற்பனை செய்துவிட்டேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். எனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிக செலவு ஏற்பட்டது. அதனை ஈடுசெய்வதற்கு என்னிடம் பணம் இருக்கவில்லை.

ஜனாதிபதி நிதியத்தின் உதவி
எனவே, பதுளையில் நான் 63 வருடங்களாக வாழ்ந்த வீட்டை விற்பனை செய்துவிட்டேன்."எனது தந்தை வழி உரிமையாகவே எனக்கு இந்த வீடு கிடைத்தது. வீட்டை விற்ற பணத்தில் மருத்துவச் செலவைச் செலுத்திவிட்டேன்.
எஞ்சிய பணத்தில் சிறிய வீடொன்றைக் கட்டிக்கொண்டு எஞ்சிய காலத்தைக் கடந்த வேண்டியது தான்.
பதுளையில் இருந்தே அரசியலிலும் ஈடுபடுவேன். ஜனாதிபதி நிதியத்திடம் பணம் கேட்பதற்கு நான் முற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        