தொடரும் சீரற்ற காலநிலை : கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம்
சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் நிலையில் கிளிநொச்சி குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிகளவான கலங்கிய நீர் வருவதனால் குடிநீருக்கான நீரை சுத்திகரித்து வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் எந்திரி எஸ். சாரங்கன் (S.Saranghan) தெரிவித்துள்ளார்.
இதனால் மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகமே மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சிக்கான குடிநீரானது கிளிநொச்சி குளத்திலிருந்தே பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகிகப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிகம் கலங்கிய நீர் வருவதனால் பிரதான நீர் சுத்திகரிப்புநிலையத்தில் சுத்திகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது கிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க முடியாதுள்ளது.
நாளாந்த நீர்த் தேவையின் மூன்றில் ஒரு பகுதியை மாத்திரமே தற்போது வழங்க கூடியதாக இருப்பதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பொது மக்கள் நீரை சேமித்தும், சிக்கனமாக பயன்படுத்துவதோடு, குடிநீருக்கு கொதித்தாறிய நீரை பயன்படுத்துமாறு எஸ். சாரங்கன் அறிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மழை பெய்து கிளிநொச்சி குளத்திற்கான நீர் கலங்கிய நிலையில் வருமாயின் எதிர்காலத்திலும் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோக நிலைமையே ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு, இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களுக்கு 021 2283981 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
