இலங்கை வந்தடையவுள்ள டீசல் தாங்கிய கப்பல்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக 28,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று பிற்பகல் நாட்டுக்கு வந்துசேரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினமும் 37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டினை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு இரு கப்பலூடாகவும் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ள டீசலை இன்றைய தினத்துக்குள் முத்துராஜவளை களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த ஓரிரு தினங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்துள்ளது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan