ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தாரா நிர்மலநாதன்! செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரா.சம்பந்தன்,தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா. சாணக்கியன், சிவஞானம் சிறீதரன், தவராசா கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துக்கொண்டாரா இல்லையா என்பது தொடர்பில் ஊடகங்கள் மத்தியில் தற்போது கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,



