ட்ரம்ப்பை கொலை செய்ய மத்திய கிழக்கில் சதி! மென்ஹாட்டன் நீதிமன்றில் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் டொனால்ட் ட்ரம்ப்பை (Donald Trump) கொலை செய்ய ஈரானில் (Iran) இருந்து சதி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே அவரை கொலை செய்வதற்கு ஈரானின் புரட்சிகர பாதுகாவலாரான ஃபர்ஹாத் ஷகேரி (Farhad Shakeri) என்பவர் சதித்திட்டம் தீட்டியதாக மென்ஹாட்டனில் (Manhattan) உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஈரான் பதில் வழங்கவில்லை
அத்துடன், ட்ரம்ப் உட்பட ஈரானின் இலக்குகளை குறிவைப்பதற்காக குற்றவாளிகளின் வலையமைப்பு ஒன்றிற்கு அந்நாட்டினால் பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஈரானைப் போன்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சில அமைப்புக்கள் உலகில் இயங்கி வருவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு ஈரான் உடனடியாக பதில் வழங்கவில்லை என்ற போதிலும், கடந்த காலங்களில் இது போன்ற குற்றச்சாட்டுக்களை அந்நாடு மறுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
