இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த புலம்பெயர் அமைப்புகள்!
இலங்கையில் முதலீடு செய்ய முன்வருமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை புலம்பெயர் அமைப்புகள் ஏற்க மறுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனடா, பிரித்தானியா, மற்றும் அமெரிக்காவில் செயற்படும் புலம்பெயர் அமைப்புகள் இவ்வாறு மறுப்பு வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இந்த நிலையில் முதலீடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்று புலம்பெயர் அமைப்புகள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
