புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தாயக தலையீட்டை தடுக்க புது வியூகம்
புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தாயக தலையீட்டை தடுக்க புது வியூகம் முன்னெடுக்கப்படுவதாக பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது தமிழர் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றி நிலங்களை அபகரிக்க சிங்கள அரசு முற்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை பெறுதல் தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு உதவும்.
தேசிய உணர்வினால் சிங்கள தேசம் எதிர்நோக்கிய இழப்பு பேரிழப்பாகும். இதன் காரணமாகவே தற்போது பல பகுதிகள் சீனா, அமெரிக்கா,ரஸ்யா போன்ற பல நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதாவது தமிழர் தரப்பு ஒருபோதும் சிங்கள தரப்புடன் இணைந்து வாழப்போவதாக தெரிவிக்கவில்லை.தமிழர் தரப்பு தங்களது தேசியத்தை தற்போது தக்கவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri