வெறிப்பிடித்தவர் போல் மாறியுள்ள டயனா கமகே-நளின் பண்டார
ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு அடுத்த சில தினங்களில் வழங்கப்பட உள்ளதால், அவர் வெறிப்பிடித்தவர் போல் மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
டயனா கமகேவுக்கு குடியுரிமை கிடையாது
டயனா கமகே இலங்கை நாட்டின் பிரஜையல்ல. அவருக்கு குடியுரிமையும் கிடையாது. அப்படி இருக்கும் போது அவர் உபதேசங்களையும் செய்கிறார். நன்றி மறந்தவர் என்று எமது கட்சியின் தலைவர் மீது குற்றம் சுமத்துகிறார்.
தினமும் இதனை செய்கிறார். நாங்கள் நன்றி கடனை செலுத்தி பெரிய தவறை செய்து விட்டோம். டயனா கமகேவின் கட்சியை எமது கட்சியாக பெற்றுக்கொள்ளும் போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி ஒன்றை வழங்கினார்.
எனினும் நாட்டில் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை மீறியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆறு தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனங்களே கிடைத்தன. அவற்றுக்கு நியமிக்கபட வேண்டியவர்கள் பலர் இருந்தனர்.
நன்றியை கடனை நிறைவேற்ற சஜித் பிரேமதாச, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை டயனா கமகேவுக்கு வழங்கினார். தற்போது அவர் நன்றி கடன் தொடர்பில் எமக்கு பாடம் நடத்த முயற்சிக்கின்றார்.
நன்றியை மறக்காது சஜித் பிரேமதாச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினார். அது பற்றி சற்றும் சிந்திக்காது, பெறுமதியை வழங்காது செயற்படுகிறார்.
இங்கிலாந்து குடியுரிமை இருப்பதை மறைத்தார்
எம்மை ஏமாற்றியும் பொய் கூறியும், கட்சிக்கும் பொய்யான ஆவணங்களையு வழங்கியும், நாட்டுக்கும் பொய்யான ஆவணங்களை வழங்கியும் போலி கடவுச்சீட்டை பெற்று, தனக்கு இருக்கும் இங்கிலாந்து குடியுரிமையை மறைத்தார்.
அத்துடன் திருட்டு வழியில் ராஜதந்திர கடவுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. மிகவும் மனவருத்தம். டயான கமகே கலந்துக்கொள்வது இதுவே இறுதியான வரவு செலவுத்திட்டமாக இருக்கும்.
சஜித் பிரேமதாச காரணமாகவே டயனா கமகே நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்தது என்பதை நினைவுப்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால், அவருக்கு என்றுமே நாடாளுமன்றத்திற்கு வரும் கௌரவ வாய்ப்பு கிடைத்திருக்காது என நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.