கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு பெறுமதி வாய்ந்த டயலைஸ் இயந்திரம் அன்பளிப்பு!
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு டயலைஸ் இயந்திரம் உபகரணம் ஒன்று நன்கொடையாக இன்று வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவரும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் அவர்களிடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்குச் சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் ‘ஜன சுவய’ கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு எதிர்க் ட்சியிலிருந்து ஓர் மூச்சுத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இத்திட்டத்தினூடாக வழங்கப்பட்ட குறித்த உபகரணம் 23,20000 ரூபா பெறுமதியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும
பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிரேஷ்ட பிரதித் தலைவர்
ராஜித சேனாரத்ன, வைத்தியர் காவிந்த ஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின்
பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் மற்றும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சித்தார்தன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகிய பிரதிநிதிகளும் கலந்து
கொண்டுள்ளனர்.