வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும் என இதன்போது நாடளாவிய ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவால் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அரச ஊழியர்களின் வயதெல்லையை 65 வயதாக உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரம் என்பன தொடர்பில் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri