வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும் என இதன்போது நாடளாவிய ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவால் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அரச ஊழியர்களின் வயதெல்லையை 65 வயதாக உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரம் என்பன தொடர்பில் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam