வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் (04.06.2023) மாலை நடைபெற்றுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவையில் குறித்த விடயங்களைப் பேசுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |