நீண்ட காலத்திற்குப் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கொழும்பு பங்குச் சந்தையில் கடந்த ஒருவார காலமாக தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விநியோகம் சீராகத் தொடங்கியதன் பின்னர் பங்குச் சந்தை புள்ளிகள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
பங்குகளின் விலைச்சுட்டி அதிகரிப்பு
அதன் பிரகாரம் நேற்றைய தினம் அனைத்துப் பங்குகளின் விலைச்சுட்டி 206.17 புள்ளிகளினால் அதிகரித்துள்ளது.

இது 2.46 வீத வளர்ச்சியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய நாளின் இறுதியில் அனைத்து விலைச்சுட்டிகளும் 8.706 வீதத்தினால் அதிகரித்துக் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நீண்ட காலத்தின் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி புரள்வு கடந்த 4ஆம் திகதி 3 பில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன்படி, நேற்றைய தினம் கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனைகளின் முடிவில் 3.79 பில்லியன் ரூபா பரிவர்த்தனை புரள்வு பதிவாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| பங்குச் சந்தையின் தினசரி வருவாய் 3 பில்லியனைத் தாண்டியுள்ளது |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam