பங்குச் சந்தையின் தினசரி வருவாய் 3 பில்லியனைத் தாண்டியுள்ளது
நீண்ட காலத்தின் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி புரள்வு 3 பில்லியன் ரூபாவை நேற்று (04) கடந்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனைகளின் முடிவில் 3.79 பில்லியன் ரூபா பரிவர்த்தனை புரள்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும், நேற்றைய வர்த்தக முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் 149.00 புள்ளிகள் அதிகரித்து 8,229.14 புள்ளிகளாகவும், S&P Sri Lanka 20 சுட்டெண் 91.62 புள்ளிகள் அதிகரித்து 2,677.67 புள்ளிகளாகவும் காணப்பட்டன.

இந்த அதிகரிப்பு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் முறையே 1.84 சதவீதம் மற்றும் 3.54 சதவீத அதிகரிப்பாகும். 114 நிறுவனங்களும் இந்தப் பங்கு விலைக் குறியீட்டின் அதிகரிப்புக்கு சாதகமான பங்களிப்பைச் செய்துள்ளன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக அனைத்துப் பங்கு விலைக் குறியீடுகளும் 100 புள்ளிகளைத் தாண்டியிருப்பது சிறப்பு.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri