இயற்கையோடு இணைந்து தீபாவளி கொண்டாடிய யாழ் மக்கள்!!
இயற்கையின் அழகை பேணவும், வளமான மற்றும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இன்று தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ளுள்ளது.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் சேதன விவசாயம், ஒருங்கிணைந்த உற்பத்திகள் மற்றும் பொழுதுபோக்குகளுக்கு பிரசித்தி பெற்ற ஓர் சுற்றுலா மற்றும் கைத்தொழில் அறிவியல் மையமாக மாறும் என்று யாழ் மக்களால் நம்பப்படுகின்ற றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இன்று நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்களில் சிறுவர்கள் பெரியவர்கள் என்று ஏராளமான மக்கள் அதில் பங்குபற்றி களிகூர்ந்துள்ளார்கள்.