12 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய 12 கடற்றொழிலாளர்களையும் தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 கடற்றொழிலாளர்கள் எல்லை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதவான் உத்தரவு
இதன்படி கைதானவர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு பதில் நீதவான் குமாரசுவாமி உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 12 கடற்றொழிலாளர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பபட்டிருந்தனர்.
இதேவேளை கைது செய்யப்படாத குறித்த படகின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam