தடுத்து வைக்கப்பட்ட தேரர் : மன்னிப்புக்கோரும் அமைச்சர்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 12 மணிநேரம் காத்திருக்க வைக்கப்பட்ட
சம்பவம் தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அஜான் பிரம்மவன்சோ
தேரரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பில் தவறு செய்தவர்களின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (06.06.2023)அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள்
இந்த சம்பவத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்கள் குற்றம் சாட்டியதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஊடகங்கள் செய்திகளை உருவாக்கக்கூடாது.
உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். எனவேதான் ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |