கிளிநொச்சி இளைஞர் கழக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் பங்கெடுத்த பிரதியமைச்சர்
இளைஞர் கழகங்களை வலுப்படுத்தி இளைஞர் கழகங்கள் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலக இளைஞர் கழக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எரங்க குணசேகர கலந்து கொண்டிருந்தார்.
பரந்தன் கிராம அலுவலக வளாகத்திலுள்ள பொதுநோக்கு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. கண்டாவளை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
பாரியளவில் நிதி
இதன்போது, பிரதியமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள அனைத்து யூத் கிலப்புகளுக்கும் விஜயம் செய்ய உள்ளதாகவும் அவர்களின் தேவைகள் அறிந்து தேவைக்கு ஏற்ற வகையில் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக பாரியளவில் நிதி வடக்கு கிழக்குக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த நிதியினை வடக்கு கிழக்கில் உள்ள யூத் கிளப்கள் ஊடாகவே வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam
