மட்டக்களப்பிற்கு விரைவில் நியமிக்கப்படவுள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மட்டக்களப்பில் (Batticaloa) பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு விரைவில் புதிய வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்திற்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறு அண்மையில்
திருகோணமலைக்கு வருகைதந்த சுகாதார அமைச்சு உயரதிகாரிகளிடம் கிழக்கு மாகாண
சுகாதாரத் திணைக்களத்தினரும் மக்கள் பிரதிநிதிகளும் அவரச கோரிக்கையினை
முன்வைத்ததை அடுத்தே இந்த நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், குறிப்பாக அடுத்த வாரம் மட்டக்களப்பு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை புதியவர் ஒருவர் ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.
மட்டக்களப்பு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியகலாநிதி ஜி.சுகுணன், வவுனியா மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், குறித்த வெற்றியடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
