ஐ.நா சார்ந்திருப்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்காகவா அல்லது அப்பாவி மக்களுக்காகவா? தேரர் எழுப்பும் கேள்வி
பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பாகச் சர்வதேச தலையீட்டுடன் அவருடைய மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு ஐ.நா சபையை நாம் வலியுறுத்துகின்றோம் என ஜம்புரேவெல சந்திரரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றையதினம் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். இந்த இளைஞர்கள், அவர்களுடைய உத்வேகம் காரணமாகவும், அவர்களுடைய சிந்தனை காரணமாகவும், மதம் குறித்த பற்றுதல் காரணமாகவும் இப்படியான விடயங்களில் ஈடுபடும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாமும் இளம் வயதில் இப்படி தான் இருந்தோம், ஆகவே இவற்றைப் பெரிதாக எடுக்கத் தேவையில்லை என இந்த கொலையைச் சாதாரணமாக்கும் வகையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒரு நாட்டில் வாழும் ஒரு பிரஜையின் உரிமைகள் வேறு நாட்டில் வாழும் பிரஜையால் பறிக்கப்படும் போது அந்த உரிமைகளை பாதுகாப்பதற்கே ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்கள் உருவானது.
ஆனால் பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் ஐ.நா சபையோ அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்புக்களுமே இதுவரை எந்தவொரு அறிக்கையினையும் வெளியிடவில்லை.
ஆகவே நீங்கள்
சார்த்திருப்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்காகவா அல்லது சாதாரண அப்பாவி குடி
மக்களுக்காகவா? என ஐ.நா அமைப்பிடம் நாம் கேள்வியெழுப்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam