பெண்களை மிகவும் மோசமாக சோதனை செய்த சிறைச்சாலை அதிகாரிகள்: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Selvam Adaikalanathan Sri Lanka Department of Prisons Sri Lanka
By Thileepan Sep 12, 2022 09:32 PM GMT
Report

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற அவர்களது உறவினர்களான பெண்களை மிகவும் மோசமாக சோதனை செய்து அவர்களை அசிங்கப்படுத்தியதுடன், இனவாதமாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். 

வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கைதிகள் தினத்தை முன்னிட்டு தங்களது உறவுகளை சிறைச்சாலைகளில் பார்வையிடச் சென்ற சொந்தங்கள் மிக மோசமான முறையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்கள். பெண்கள் மிகவும் வன்மையபான முறையில் சோதிக்கப்பட்டுள்ளார்கள். அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்கள்.

சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதி ஒருவலை பார்க்கச் சென்ற அவரது மகளை மிக மோசமாக பரிசோதனை செய்த நிலையில் அந்த சகோதரி அதற்கு எதிர்ப்பை காட்டிய போது அவர்கள் சிங்களத்தில் இது எங்களது சிங்கள நாடு எனக் கூறியுள்ளார்கள்.

சிறைச்சாலை தினம்

பெண்களை மிகவும் மோசமாக சோதனை செய்த சிறைச்சாலை அதிகாரிகள்: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு | Department Of Prisons Sri Lanka Tamil People

மிகவும் இனவாதத்தோடு மோசமாக சிறை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளார்கள். சிறைச்சாலை தினம் என்பது எல்லோரும் வந்து பார்வையிடும் ஒரு தினம்.

நவீன முறையில் பல சிறைச்சாலைகளில் பரிசோதனை முறைகள் உள்ளன. அதைவிடுத்து இன துவசத்தோடு மிகவும் மோசமாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளோம்.

இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் தமிழ் மக்களுடைய தீர்வினையும், அவர்களது உணர்வுகளையும், சரி செய்வது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்.

ஆனால் அதற்கு நேருக்கு மாறாக பல விடயங்கள் நடந்து வருகின்றது. நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் கைதிகள் விடுதலை கேள்விக்குறியாகவுள்ளது. அவர்கள் தற்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு எமது ஆதரவு உண்டு. அவர்களது விடுதலைக்காக நாங்கள் முயற்சிப்போம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது

பெண்களை மிகவும் மோசமாக சோதனை செய்த சிறைச்சாலை அதிகாரிகள்: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு | Department Of Prisons Sri Lanka Tamil People

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றாவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது.

சிறைகைதிகளின் விடுதலை நடைபெறவில்லை. பார்வையிடச் செல்பவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிலங்களை அபகரிக்கும் நிலை தொடர்கிறது.

பத்திரிகையாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தேசத்திற்காக குரல் கொடுத்தவர்கள் என பலரை சிஐடி அழைத்து விசாரணை செய்கிறது.

வடக்கு, கிழக்கில் 15 பேருக்கு மேல் அழைக்கப்பட்டுள்ளார்கள்.நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் உரையாற்றியுள்ளோம். எதற்காக இந்த விசாரணை. இது தேவையற்றது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்ய புலம்பெயர் உறவுகளை முதலீடு செய்ய அழைக்கிறார்கள்.

அவர்கள் அவ்வாறு வரும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் நொண்டி சாட்டுக்களை சொல்லி அதனை பறிக்கப் பார்க்கிறார்கள். இதனை தமிழ் தரப்பு தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

தமிழ் மக்களை நசுக்கிக் கொண்டிருந்தால் இந்த நாடு பொருளாதாரத்தில் நெருக்கடியில் இருந்து மீள முடியாது. எனவே எமது மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US