மக்களே அவதானம்: வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டிலுள்ள 44 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதி டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் டெங்கு தொற்று பரவல் தொடந்தும் அதிகரித்து வருகிறது.
நாட்டில் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3063 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான டெங்கு நோயாளர்கள்
மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டிலுள்ள 44 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகள் அதி டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam