மட்டக்களப்பில் வேகமாக பரவும் டெங்கு நோய்!
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் மிக வேகமாக டெங்கு நோய் பரவி வருவதையடுத்து அதனைக் கட்டுப்படுத்தும் துரித நடவடிக்கைகளை சுகாதார பகுதியினர் மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி மருத்துவர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையும்(18) பல இடங்களில் டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் 40 வீடுகள் மற்றும் கடைகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையின் போது டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சுகாதார பகுதியினர் தெரிவித்துள்ளனர்.