டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் பாதிப்பைத் தடுப்பதற்குப் பெற்றோர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனச் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (11.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் கல்லீரல் பாதிப்பைத் தடுப்பதற்குப் பெற்றோர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
டெங்குவை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்
டெங்கு காய்ச்சலிலிருந்து மீண்ட சிறுவர், சிறுமிகளின் மீண்டும் கடுமையான வேலையில் ஈடுபடுத்தினால், கல்லீரலில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
டெங்கு குணமானதும் ஓரிரு வாரங்களுக்கு, சிறுவர், சிறுமிகளுக்கு அதிக உடல் உழைப்பைக் கொடுக்காதீர்கள்.
கல்லீரல் பாதிக்கப்பட்டால், மூளையைப் பாதிக்கும். எனவே, டெங்குவை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
டெங்கு வந்தால் சிக்கல்கள் வரலாம். மேலும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 40 சிறுவர்கள் தற்போது லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |