ஓட்டமாவடியில் 110 பேருக்கு டெங்கு! - சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிப்பு
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை 110 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும், தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக்கின் வழிகாட்டலில் இன்று (07.02.2021) மாஞ்சோலை மற்றும் பதுரியா நகர் பிரிவில் சுத்தப்படுத்தும் நிகழ்வு பொதுச் சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், ஓட்டமாவடி பிரதேச சபை, ரேசிங்க லெவன் விளையாட்டு கழக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்களைச் சுத்தப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி தொடக்கம் பெப்ரவரி 07ம் திகதி வரை 110 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 01ம் திகதி தொடக்கம் 07ம் திகதி வரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்; ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி 07ம் திகதி வரை டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களைச் சுத்தம் இல்லாமல் வைத்திருந்த 54 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பதினைந்து பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்துள்ளார்.















நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
