காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை! தீவிரமடையும் நிலைமை
காய்ச்சல் இருப்பவர்கள் டெங்கு பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு
இது தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் வைத்தியர் கபில கண்ணங்கரா தெரிவிக்கையில், காய்ச்சல் இருந்தால் டெங்கு பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகித்தால் பொது மக்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
நாட்டின் பல பகுதிகளில் இப்போதெல்லாம் டெங்கு வேகமாகப் பரவி வருகிறது.
எனவே உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும், தங்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியவும், மருத்துவ ஆலோசனையின்படி செயல்படவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சுத்தம் செய்தல்
இதேவேளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பூச்சியியல் நிபுணர் சபுந்தலா ஜானகி கூறுகையில், நாடு முழுவதும் நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய, தங்களை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றுள்ளார்.
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சீரியல்கள் நேரம் மாற்றமா?... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம் Cineulagam