யாழில் தொடர்ந்து நான்கு நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில்(Jaffna) எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாணத்தில் மழைக்குப் பின்னரான சூழலில் டெங்கு பரவல் மிக அதிகமாக காணப்படுகின்றது.
விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
அதனால் யாழ். மாநகர சபை ஆணையாளர் நகர மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கிராம அலுவலர் பிரிவு ரீதியாக பொருத்தமான பொறிமுறையூடாக நுளம்பு பெருகாது தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக காணிகளில் காணப்படும் வெற்றுக்கலன்களைச் சேகரித்து உரிய வகையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல பிரதேச செயலாளர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்ற அறிக்கையை 16 ஆம் திகதி அனுப்பி வைக்குமாறும் பிரதேச செயலர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்" - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri